காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற: யோகிபாபுவின் ட்ரிப் டீசர்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இன்னொரு திரைப்படம் ட்ரிப். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஒரு அடர்ந்த காட்டுக்கு ட்ரிப் செல்லும் யோகிபாபு, சுனைனா மற்றும் நண்பர்கள் சிலர் காட்டில் ஒரு அமானுஷ்ய சக்தியால் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஆபத்துகள் தான் இந்த படத்தின் கதை

முழுக்க முழுக்க காட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே இந்த படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படம் என்பது தெரிவடால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று கூறலாம்.அதே நேரத்தில் த்ரில் காட்சிகளுக்கு மத்தியில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கருணாகரன் காமெடி இடையிடையே இருப்பதால் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக டீசரின் கடைசியில் மரத்தில் கட்டி போடப்பட்டிருக்கும் கருணாகரனிடம் யோகிபாபு, ‘என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க என்று கேட்க அதற்கு கருணாகரன், ‘முதலில் பேண்ட்டுக்குள் இருப்பதை வெளியில எடுத்துவிடு என்று கூற அதற்கு யோகிபாபு, ‘காப்பாற்றலாம்ன்னு வந்தா சிலம்பரசன் மாதிரி பேசுறியே என்று சிம்புவை கலாய்க்கும் காமெடி காட்சி ரசிக்கும் வகையில் உள்ளது

யோகிபாபு, சுனைனா, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை என்பவர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்
 

More News

உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.!

சேலை பிடிக்காததற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்

நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் மீது தடியடி: பெரும் பரபரப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம் அருகே பாஜகவினர் இன்று மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது 

அம்மா, தம்பியை கத்தியால் குத்திவிட்டு காதலனுடன் டூர் சென்ற இளம்பெண்!

பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாயையும் தம்பியையும் கத்தியால் குத்திவிட்டு அந்தமானுக்கு காதலனுடன் டூர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது