'தளபதி 65' படத்தில் 4வது முறையாக இணைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதும் மூன்று நாள் படப்பிடிப்பும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி யோகிபாபு இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் அவர் ’மெர்சல்’ ’சர்க்கார்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 4வது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 65’ படத்தில் யோகிபாபு இணைந்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள்: இருவருமே சிவகார்த்திகேயன் நாயகிகள்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இருவருமே சிவகார்த்திகேயனுடன் நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீன் ஏஜ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே: 36 வயது டிடியின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில்

மணக்கோலத்தில் பவித்ரா-சுதர்ஷன்: புகைப்படத்தை அடுத்து வீடியோ வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும், வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறும்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....!ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி...!

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு குறித்த முக்கிய தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அண்ணாமலைக்கு ஆதரவாக செம டான்ஸ் ஆடிய 'கலா' மாஸ்டர்: வீடியோ வைரல்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நேற்று இரவு 7 மணி உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பதும் தெரிந்தது.