close
Choose your channels

யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு: புதிய தேதி என்ன?

Saturday, April 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும், அவரது குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் என வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது திருமணம் அவசர அவசரமாக நடந்து விட்டதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றும், இதனை அடுத்து ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் நடிகர் யோகிபாபு தெரிவித்தார்

இதனை அடுத்து இதுகுறித்து அழைப்பதழை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பல பிரமுகர்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் அவர் நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்தார்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து யோகிபாபுவின் திருமண வரவேற்பு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே தற்போது யோகிபாபு - மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புதிய தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என யோகிபாபு தரப்பில் கூறப்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.