யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு: புதிய தேதி என்ன?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும், அவரது குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் என வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது திருமணம் அவசர அவசரமாக நடந்து விட்டதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றும், இதனை அடுத்து ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் நடிகர் யோகிபாபு தெரிவித்தார்

இதனை அடுத்து இதுகுறித்து அழைப்பதழை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பல பிரமுகர்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் அவர் நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்தார்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து யோகிபாபுவின் திருமண வரவேற்பு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே தற்போது யோகிபாபு - மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புதிய தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என யோகிபாபு தரப்பில் கூறப்பட்டுள்ளது
 

More News

நன்றி தேவையில்லை, உத்தரவு போடுங்கள்: முதல்வருக்கு பிரபல நடிகரும் வேண்டுகோள் 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

போலீசார்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவா? அமெரிக்க நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பி விடும்

வெளியே போகாதே, உயிரை போக்காதே: சீனுராமசாமியின் கொரோனா பாடல்

கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பல திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் பாடல் வரிகளில் என்.ஆர்.ரகுநாதனின் இசையில்