close
Choose your channels

டப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு? பரபரப்பு தகவல்

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படத்தில் யோகிபாபு நடித்த படம் இல்லை என்ற அளவுக்கு அவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் யோகி பாபு நடித்த திரைப்படம் ’மணி’. இந்த படத்தை கிஷோர் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டாலும் தற்போதுதான் தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு டப்பிங் பேச யோகி பாபு மறுத்துவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் கிஷோர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து யோகி பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், தற்போது ’அரண்மனை 3’ திரைப்படத்திற்காக தான் வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் ’மணி’படத்தில் டப்பிங் பேச யோகிபாபு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து அடுத்த மாதம் யோகிபாபு சென்னை திரும்பியதும் ’மணி’என்ற படத்திற்கு அவர் டப்பிங் பேசி அந்த படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.