close
Choose your channels

பேசுறவன் பேசட்டும்.. கடவுள் பாத்துக்கிடுவான்: தன் மீதான குற்றச்சாட்டுக்கு யோகிபாபு பதில்..!

Friday, May 9, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் யோகி பாபு புரமோஷனுக்கு வரவில்லை என்றும் ஏழு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் வருவேன் என்று சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு யோகி பாபு பதில் அளித்துள்ளார்.

’கஜானா’ என்ற படத்தின் புரமோஷன் விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்பதால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யோகி பாபு ஏழு லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதனால்தான் புரமோஷனுக்கு வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் யோகி பாபு நடித்த 'ஜோரா கைதட்டுங்கள்’ என்ற பட விழாவில் பேசிய போது, "ஒரு பட விழாவுக்கு நான் வரவில்லை என்பதால் எப்படி எப்படியோ பேசுகிறார்கள். என்னிடம் உதவியாளராக இருந்த ஒருவர் படம் எடுக்கிறார் என்பதால் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். மேலும் அவர் கேட்டுக் கொண்டதற்காக இரண்டு நாள் மட்டும் நடித்துக் கொடுத்தேன். அந்த பட விழாவுக்கு நான் வரவில்லை என்றுதான் குற்றம் சாட்டுகிறார்கள். இரண்டு நாள் நடித்த படத்துக்கு எல்லாம் நான் வர வேண்டுமா?

’ஜோரா கைதட்டுங்கள்’ என்னுடைய படம். இந்த படத்திற்கு நான் புரமோஷனுக்கு வரவில்லை என்றால் என்னை குற்றம் சாட்டலாம் என்று தெரிவித்தார்.

மேலும் எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என்ற பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியலை கொடுத்தால் நீங்கள் பணம் வாங்கி கொடுப்பீர்களா? எதையும் அவசரப்பட்டு பேச வேண்டாம். என்னைப் பற்றி பேசுபவர்களை கடவுள் பார்த்துக்கொள்வான்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment