கொரோனாவை கண்டுபிடித்த முதல் தீர்க்கதரிசி இவர்தான்: யோகிபாபு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மனித இனமே அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு இந்த கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே வழி தனிமைப்படுத்துதல், விலகியிருத்தல் மட்டுமே என்பது அனைத்து நாடுகளின் அரசுகளும் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரசை முன்பே கணித்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான் என்று நித்தியானந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் யோகிபாபு தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக திடீரென தலைமறைவான நித்தியானந்தா, தன்னந்தனியாக ஈக்வடார் அருகில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு அதில் தன்னந்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் யோகி பாபுவின் டைமிங் காமெடியை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.