close
Choose your channels

நன்றி அம்மா: யார்க்கர் கிங் நடராஜனின் அன்னையர் தின நெகிழ்ச்சியான பதிவு!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது அன்னையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யார்க்கர் கிங் நடராஜன் தனது சமூக வலைதளத்தில் அன்னைக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை கூறியுள்ளார்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவரும், நான் சரியான முடிவு எடுக்க எனக்கு அறிவுரை கூறியவரும், என்னுடைய ஒவ்வொரு நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொடுத்தவரும், நான் முன்னேற ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க உதவியவரும், எனக்கு வலிமையை கொடுத்தவரும், நான் தவறு செய்யும் போதெல்லாம் என்னை திருத்தியவரும், வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் சமமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவரும், நான் நானாகவே இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவருமான எனது அம்மாவுக்கு நன்றி.

எல்லாமே எனது அம்மாதான், அவருடைய ஆசியால் தான் நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று நெகழ்ச்சியாக நடராஜன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.