close
Choose your channels

17 வயது சிறுமியை கம்பியால் குத்திவிட்டு கரண்ட் கம்பியில் தொங்கிய வாலிபர்! ஒருதலை காதலால் விபரீதம்

Tuesday, July 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவண்ணாமலை அருகே காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை கம்பியால் குத்தி விட்டு அருகில் இருந்த கரண்ட் கம்பி மீது கையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர், சிறுமியிடம் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்தப் சிறுமி மறுக்கவே ஆத்திரத்தில் அருகிலிருந்த கம்பியை எடுத்து அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனே அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டார். அடுத்த நிமிடமே அந்த வாலிபர் ஷாக் அடித்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருதலை காதலால் 17 வயது சிறுமியை சரமாரியாக தாக்கி விட்டு கரண்ட் கம்பியில் தொங்கிய வாலிபர் ஒருவரால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos