close
Choose your channels

டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

Tuesday, April 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களில் சம்சத் என்ற வாலிபர் நேற்று வேலை முடிந்தவுடன் கட்டிடத்தின் 3வது மாடியில் தனது மொபைல்போனில் டிக்டாக் வீடியோவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது.

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்சத்தை, உடன் பணிபுரிபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர் அவரை சோதனை செய்து ஏற்கனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறியதால் அனைவரும் சோகமடைந்தனர். இதன்பின்னர் சம்சத்தின் உடல் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணி முடியாத கட்டிடத்தில் டிக் டாக் வீடியோவை பார்த்து கொண்டே அங்குமிங்கும் அவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.