close
Choose your channels

ஒரே காதலில் 2 மாங்கா....!   அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....!

Saturday, June 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அத்தை மகள்கள் இருவரின் காதல் பிடிவாதத்தால், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் மாமன் மகன்.

தெலுங்கானா மாநிலத்தில், ஆதிலாபாத் மாவட்டம் கான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் அர்ஜுன். இவர் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோருக்கு, ஒருவரை அறியாமல் மற்றொருவருக்கு, மாற்றி மாற்றி காதல் அம்பு விட்டுள்ளார். காதலில் விழுந்த இரண்டு அத்தை மகள்களும், மாமன் மகனை உண்மையாக காதலித்து வந்துள்ளனர். சென்ற 3 வருடங்களாக நடந்து வந்த இந்த காதல் விஷயம், குடும்பத்தாருக்கு தெரிய அவர்கள் கூடி பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.

அத்தை மகள்கள் இருவரும், அர்ஜுன் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், குடும்பத்தார் இரு பெண்களையும் அவருக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். ஆதிவாசிகளான இவர்கள் முதல் முறையாக தங்கள் பரம்பரை வழக்கத்தை மாற்றி, இந்த முடிவை எடுத்துள்ளனர். இவர்களின் திருமணம் சென்ற வாரம் குடும்பத்தார் மத்தியில் ஆடலுடன் மகிழ்ச்சியாக நடந்து முடிந்தது. பலருக்கும் மணமகளே கிடைக்காத நிலையில், ஒரே மேடையில், இரு பெண்களை கரம் பிடித்த மணமகனின் செயல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 90'ஸ் கிட்ஸ் பலரும் புலம்பி கமெண்டுகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.