close
Choose your channels

படுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவை அருகே மர்ம இளைஞர் ஒருவர் ஒருசில வீடுகளின் படுக்கை அறைகளை மட்டும் எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு மர்ம இளைஞர் ஒரு சில வீடுகளில் படுக்கை அறையை மட்டும் எட்டிப்பார்த்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் உள்ளன. இவர் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதோடு, வீடியோவும் எடுத்தாரா? என்பது போன்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வரும் இந்த மர்ம நபர் ஒருசில வீடுகளை மட்டும் குறிவைத்து அந்த வீடுகளின் சுவர் ஏறி குதித்து மிகச்சரியாக படுக்கை அறைஜன்னலின் திரைச்சீலையை திறந்து படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுக்கை அறையை மட்டும் எட்டிப்பார்க்கும் அந்த மர்ம நபர் யார்? என்ற கேள்வி அந்த பகுதியினர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.