close
Choose your channels

கறிவிருந்து போட்ட இளம்பெண்ணை கொலை செய்த உறவினர்கள்: அதிர்ச்சி தகவல்

Thursday, December 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இளம்பெண் ஒருவரின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த உறவினர்கள் அவர் போட்ட கறி விருந்தையும் சாப்பிட்டுவிட்டு அவரை கொலை செய்து நகைகளை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே உள்ள சுட்டகுண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி திருமணம் முடிந்து நான்கே ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். அதன் பின்னர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரது வீட்டிற்கு சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய உறவினர்கள் விருந்தினராக வந்தனர். விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதற்காக கறி விருந்து போட்டார் சித்ரா. இந்த நிலையில் கணவரிடம் செல்போனில் பேசுவதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த பகுதியில் டவர் கிடைக்காது என்பதால் அவர் சிறிது தூரம் நடந்து சென்று காட்டு பகுதியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த விருந்தினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜ், ரேவதியை கொலை செய்து அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை மற்றும் கையிலிருந்த செல்போனையும் திருடி விட்டுச் சென்று விட்டனர். இந்த நிலையில் செல்போன் பேச சென்ற ரேவதியை காணவில்லை என அவருடைய உறவினர்கள் தேடும்போது காட்டுப்பகுதியில் அவர் பிணமாக இருந்ததும் அவர் கழுத்தில் காயம் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலைக்கு காரணம் சித்ரா மட்டும் செல்வராஜ் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். கறி விருந்து போட்ட உறவினரை கொலை செய்த 2 பேரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.