close
Choose your channels

அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான 4 மாதத்தில் தனது கணவர் அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுபிடித்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அருள் சென்னையில் காவல் துறையில் பணிபுரிந்து வருவதால் இருவரும் சென்னையில் குடியிருந்து வந்தனர்

இந்த நிலையில் ராஜேஸ்வரி கணவர் அருளுக்கும் அவரது அண்ணிக்கும் தகாத உறவு இருந்தது என கூறப்படுகிறது. அண்ணியின் ஆபாச படத்தை மனைவியிடமே காட்டி எங்கள் இருவரின் உறவுக்கு நீதான் இடைஞ்சலாக இருக்கிறாய் என்று கூறி அருள், ராஜேஸ்வரியை சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது தம்பியுடன் போனில் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். போனில் ஆறுதல் கூறிய அவரது சகோதரர் உடனடியாக தனது அக்காவை அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரியின் தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் தனது அக்காவை அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாகவும், தனது அக்காவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.