close
Choose your channels

16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

Thursday, June 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு என்ற பகுதியை சேர்ந்த ஐயப்பன் - சரண்யா தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஐயப்பன், கேரளாவில் புதிதாக காண்டிராக்ட் வேலை எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சரண்யாவின் தங்கை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு தனது அக்காள் கணவர் ஐயப்பனின் உதவியை நாடியுள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட ஐயப்பன், இதை வைத்து பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து ஐயப்பனிடம் அந்த மாணவி தெரிவிக்க, உடனே அதற்கு ஐயப்பன் காதலன் ஏமாற்றி விட்டதாக மருத்துவர்களிடம் கூறும்படி மிரட்டி, மருத்துவமனைக்கு கருவை கலைக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோததித்த மருத்துவர்கள், மாணவி 16 வயதுடையவள் என்பதை அறிந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஐயப்பன் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து அந்த மாணவியை போலீசார் விசாரணை செய்தபோது தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது அக்காள் கணவர் என்பதையும் நடந்தவற்றையும் கூறியுள்ளார். இந்த நிலையில் தலைமறைவான ஐயப்பனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களாக மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.