close
Choose your channels

மகளுடன் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து அம்மாவுக்கு அனுப்பிய வாலிபர் கைது!

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலித்த பெண்ணுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் காதலியின் அம்மாவிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மர்பின் தனேஷ் என்பவர் ஷர்மிளா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவருக்கும் முகநூல் வழியாக முதலில் நட்பு ஏற்பட்டு அதன் பின் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஷர்மிளாவுக்கு குவைத்தில் மர்பின் தனேஷ் குவைத்தில் நர்ஸ் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்கான செலவையும் அவரே செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் குவைத் சென்ற ஷர்மிளாவிடம் அவ்வப்போது மர்பின் தனேஷ் பணம் கேட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் மர்பின் தனேஷ்க்கு தகவல் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷர்மிளாவுடன் எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது தாயாருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்பின் தனேஷை கைது செய்து விசாரணை செய்தனர்

விசாரணையில் தன்னுடைய காதலிக்கு தன்னுடைய செலவில் குவைத்தில் வேலை வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுப்பதாகவும் அதுமட்டுமின்றி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் மர்பின் தனேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.