close
Choose your channels

நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கெளதமி வீட்டில் திடீரென இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுவரேறி குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் நடிகை கெளதமி வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென நடிகை கெளதமி வீட்டுக்குக்ள் குடி போதையில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்ததாக தெரிகிறது. இது குறித்த தகவல் காவல்துறைக்கு வந்ததை அடுத்து நீலாங்கரை போலீசார் கௌதமி வீட்டுக்கு விரைந்து சென்று போதையில் இருந்த அந்த இளைஞரை கைது செய்தனர்

நடிகை கௌதமி வீட்டில் சுவரேறி குதித்த இளைஞனின் பெயர் பாண்டியன் எனவும் அவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை கௌதமி வீடு என்றே தெரியாமல் அவர் சுவர் ஏறி குதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது

இதனை அடுத்து நீலாங்கரை போலீசார் இளைஞர் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை கௌதமி வீட்டில் இளைஞர் பாண்டியன் சுவர் ஏறிக் குதித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.