சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலித்த பெண்ணை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் சென்னையில் உள்ள அலுவலகத்தில் தட்டச்சு பணி செய்து வருகிறார். இவர் ஒரு மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் இவரை சுரேந்தர் என்பவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த தேன்மொழி, பின்னர் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காததால், சுரேந்திரனிடம் பழகுவதை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மகளிர் விடுதிக்கு செல்ல ரயிலுக்காக தேன்மொழி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் தேன்மொழியை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். மேலும் அந்த பக்கமாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனையடுத்து ரயில்வே போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.