சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்!

  • IndiaGlitz, [Saturday,June 15 2019]

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலித்த பெண்ணை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் சென்னையில் உள்ள அலுவலகத்தில் தட்டச்சு பணி செய்து வருகிறார். இவர் ஒரு மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் இவரை சுரேந்தர் என்பவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த தேன்மொழி, பின்னர் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காததால், சுரேந்திரனிடம் பழகுவதை குறைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மகளிர் விடுதிக்கு செல்ல ரயிலுக்காக தேன்மொழி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் தேன்மொழியை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். மேலும் அந்த பக்கமாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனையடுத்து ரயில்வே போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

நடிகர் சங்க தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்த சீமான்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதவுள்ளன.

ரஜினி, கமல் பட வசனகர்த்தாவை தாக்கிய மளிகைக்கடைக்காரர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்', விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தாவும்

செல்போனில் இளம்பெண்ணிடம் தகாத பேச்சு: தமிழ் நடிகர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் ஒருவரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளில் பேசிய தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகர் வினாயகன் என்பவர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

விஜய் ஆண்டனி - அருண்விஜய் படத்தின் புதிய அப்டேட்!

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'அக்னி சிறகுகள்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு

ஜிப்ரானுடன் இணைந்து 'சிக்ஸர்' அடித்த சிவகார்த்திகேயன்!

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஜிப்ரான் இசையமைத்து வரும்