close
Choose your channels

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது 

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதை தொடர்ந்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த செளந்தர் என்ற வாலிபர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் நெருக்கமாக பழகியதால் கல்லூரி மாணவி கர்ப்பம் ஆனார்.

வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை மறைத்து வந்த கல்லூரி மாணவி, 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சௌந்தர் அந்த மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தானாகவே யூடியூபில் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.

ஆனால் குழந்தையின் கை பகுதி மட்டும் முதலில் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அந்த மாணவியை சேர்த்துள்ளார். மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை செய்தபோது குழந்தை உயிரிழந்ததாக கூறி மாணவியை காப்பாற்ற சென்னை ராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கல்லூரி மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலையும் குழந்தை பிறந்ததையும் மறைப்பதற்காக யூடியூபில் பார்த்து தானே பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.