தண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள் 

  • IndiaGlitz, [Monday,November 18 2019]

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி என்ற பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மூழ்கியபோது அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகாவில் உள்ள கலபுராகி என்றா கல் குவாரியில் இளைஞர்கள் மூவர் நேற்று கல் குவாரி ஒன்றில் தேங்கியிருந்த நீரில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மது அருந்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மதுபோதையில் ஒரு இளைஞர் நீந்த முடியாமல் ஒரு கட்டத்தில் தத்தளிக்க, அவர் ஆபத்தில் இருப்பது தெரியாமல் அவரை ஒருவர் உற்சாகப்படுத்தியும், இன்னொரு செல்போனில் வீடியோ எடுத்து கொண்டும் இருந்தனர்.

சில நிமிடங்களில் நீரில் தத்தளித்த அந்த இளைஞர் மூழ்கி மரணம் அடைந்தார். அதன்பின்னர் தான் நண்பர்களுக்கு விபரீதம் தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிணத்தை மீட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் மதுபோதையில் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'சிவப்பு பச்சை மஞ்சள் உள்பட இதுவரை இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகியுள்ளது

ரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா?

சமீபத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள கமலஹாசனையும், விரைவில் அரசியலில் களம்புகவுள்ள ரஜினிகாந்த் அவர்களையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே

2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும்

விமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம்