close
Choose your channels

தண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள் 

Monday, November 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி என்ற பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மூழ்கியபோது அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகாவில் உள்ள கலபுராகி என்றா கல் குவாரியில் இளைஞர்கள் மூவர் நேற்று கல் குவாரி ஒன்றில் தேங்கியிருந்த நீரில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மது அருந்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மதுபோதையில் ஒரு இளைஞர் நீந்த முடியாமல் ஒரு கட்டத்தில் தத்தளிக்க, அவர் ஆபத்தில் இருப்பது தெரியாமல் அவரை ஒருவர் உற்சாகப்படுத்தியும், இன்னொரு செல்போனில் வீடியோ எடுத்து கொண்டும் இருந்தனர்.

சில நிமிடங்களில் நீரில் தத்தளித்த அந்த இளைஞர் மூழ்கி மரணம் அடைந்தார். அதன்பின்னர் தான் நண்பர்களுக்கு விபரீதம் தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிணத்தை மீட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் மதுபோதையில் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.