close
Choose your channels

ஒரே நேரத்தில் மூன்று பேர்களுடன் உறவு வைத்திருந்த பெண் மர்ம மரணம்

Friday, November 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவன், கள்ளக்காதலன் மற்றும் இன்னொருவர் என மூன்று பேர்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்திருந்த பெண் மர்மமான முறையில் ஆற்றங்கரையில் பிணமாக இருந்தது திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரமேஷ் மற்றும் திருமங்கை ஆகிய இருவரும் வேலை செய்த போது இருவருக்கும் இடையே காதல் உண்டாகியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் வேலை செய்யும் ஓட்டலுக்கு வரும் ரெகுலர் கஸ்டமர் தனபால் எனப்வருடன் திருமங்கைக்கு காதல் ஏற்பட்டது. எனவே கணவனுக்கு தெரியாமல் அவ்வப்போது தனபாலுடன் திருமங்கை உறவு இருந்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் கணவன் மற்றும் தனபால் ஆகிய இருவர் மட்டும் என்று இன்னொரு நபருடனும் திருமங்கைக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் தனபால், திருமங்கையை வீட்டிற்கு வரவழைத்து அன்று முழுவதும் ஜாலியாக இருந்து விட்டு அதன் பின் மூன்றாவது நபர் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திருமங்கை சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்த தனபால் திருமங்கையின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். இதன் பின்னர் பிணத்தை ஒரு போர்வையால் மூடி ஆற்றங்கரையில் போட்டு விட்டதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன் மட்டுமின்றி மூன்றாவது நபருடனும் தகாத உறவு வைத்திருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.