close
Choose your channels

ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த இளைஞர்: ஒருதலை காதலா?

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த 23 வயது சதீஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள சத்யா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலை சத்யா ஏற்காத நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சண்டை நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மீது சத்யாவை தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் சத்யா மீது ரயில் ஏறியதால் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சதீஷ் அந்த இடத்தில் இருந்து தப்பி தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சத்யா ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் ராமலட்சுமி என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகன் தான் கொலையாளி சத்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.