close
Choose your channels

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

Sunday, August 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும், இந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணம் அடைந்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தர்மபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜி, பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவியும் உறவுக்கார பெண்ணுமான ராஜேஸ்வரி என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது

இந்த காதலுக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்து மறுநாள் ஊருக்கு வந்த நிலையில் இதுகுறித்த பஞ்சாயத்து அந்த கிராமத்தின் பெரியவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது மூன்று மாதத்தில் முறைப்படி பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும் அதுவரை ராஜேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது

இந்த நிலையில் ஊரடங்கை காரணம் காட்டி ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக காய்கறி வியாபாரம் செய்ய முடியாமல் விஜியும் சிக்கலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் ராஜேஸ்வரியை தன்னுடன் அனுப்புமாறு விஜி அவரது பெற்றோரிடம் வலியுறுத்தியதாகவும், காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் ராஜேஸ்வரியை அனுப்புவதாக அவரது தந்தை கூறியதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து பெங்களூரிலிருந்து சொந்த ஊர் வந்த விஜி, திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடல் சாலையோரம் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் அவரது மர்ம உறுப்புகள் பயங்கர சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரியின் பெற்றோர் உள்பட இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பலரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். என்ஜினியரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.