close
Choose your channels

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

Friday, July 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா அருகில் சீதாப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சுதேவி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இரவு பத்தரை மணிக்கு மேல் யாதவ் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு நண்பர்களுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அம்மா தோசை சுட்டு எடுத்து வந்து அவரிடம் கொடுத்து ’சாப்பிட்டுவிட்டு அதன் பின்னர் போனில் பேசு’ என்றும், ’தோசை சூடு ஆறி விடும்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் அம்மாவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து மீண்டும் அவரது அம்மா ’தோசை ஆறிவிடும், முதலில் சாப்பிடு, அப்புறம் போன் பேசு என்று கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான யாதவ் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென அம்மாவை நோக்கி சுட்டு விட்டார்.

துப்பாக்கி குண்டால் சுருண்டு விழுந்த மஞ்சதேவியை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மஞ்சுதேவியின் மகன் யாதவ்வை கைது செய்துள்ளனர். மகன் பசியாக இருப்பதால் தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.