close
Choose your channels

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்: தஞ்சையில் பரபரப்பு!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் நிர்பயாவுக்கு கொடுமை நடந்த அதே நாளில் இன்று ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகே உள்ள அரசமரத்து தெருவை சேர்ந்தவர் அஜித். 24 வயதான இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரும் தஞ்சை கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது

ஆனால் அஜித் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அவரை கண்டித்த கல்லூரி மாணவி, இனிமேல் தன்னோடு பழக வேண்டாம் என்று சொல்லியதாக கூறப்படுகிறது. காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டுவிட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த அஜித், நேற்று பேருந்தில் கல்லூரி மாணவி சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் சந்தித்து உள்ளார்

அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கல்லூரி மாணவியை வற்புறுத்தியதாகவும் ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தில் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். ஆனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அஜித்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

அஜித் கத்தியால் கழுத்தை அறுத்ததால் படுகாயமடைந்த கல்லூரி மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரை வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.