ஆபாச பேச்சு காரணமாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

  • IndiaGlitz, [Saturday,September 18 2021]

யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆபாசபேச்சு காரணமாக மேலும் ஒரு பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவர் டிக் டாக் செயலியில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார் என்பதும், ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அக்கா நாகஜோதி என்பவரும் யூடியூபில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் மருங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற 30 வயது பெண் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி, அதன்பின் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் தற்போது யூடியூபில் பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் திவ்யா மற்றும் சுகந்தி இடையே கடந்த சில வருடங்களாக மோதல் போக்கு இருந்து வந்ததாக தெரிகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் யூடியூபர் திவ்யா தன்னை பற்றி ஆபாசமாக பதிவு செய்து வருவதாக கடந்த 14ஆம் தேதி தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் திவ்யாவை தேடி வந்தனர் என்றும், தலையை தலைமறைவாக இருந்த திவ்யாவின் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்ததில் அவர் நாகூரில் இருப்பதை தனிப்படையினர் கண்டு பிடித்ததாகவும், அதன் பின்னர் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைதுசெய்யப்பட்ட திவ்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். ஆபாசபேச்சு காரணமாக மேலுமொரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா? கோலி குறித்த அடுத்த பரபரப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி வருகிறார்

போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்?

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை நேற்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை

திருமண வீட்டிற்கு சென்ற நடிகர் விமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விமல் சென்றபோது அவருடைய விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புது ரூல்ஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக எனக் கருதப்படும் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவல் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும்

இனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் காலம் தொடங்கி விட்டதாக