close
Choose your channels

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் தருமபுரியில் கைது!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூபில் சிறுவர் சிறுமியர் மற்றும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பப்ஜி மதன் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் சற்றுமுன் தர்மபுரியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் அவரை சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த புகாரிலும், சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய புகாரிலும் தேடப்பட்டு வந்த யூடியூப் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தலைமறைவானார். இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மதனின் யூடியூப் சேனலை அவரது மனைவி கிருத்திகா நிர்வாகம் செய்தார் என்பது தெரிய வந்ததை அடுத்து கிருத்திகா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் யூடியூப் மதனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் சற்று முன் அவர் தர்மபுரியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் மீது ஆன்லைனில் 120க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பதாகவும் இந்த புகார் குறித்து அவரிடம் நடைபெறும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.