கணவர் மற்றும் காதலருடன் ஒரே அறையில்.. பிரபல பெண் யூடியூபர் கைது.. 

  • IndiaGlitz, [Wednesday,December 07 2022]

பிரபல பெண் யூடியூபர் நம்ரா காதிர் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த 21 வயது நம்ரா காதிர் என்ற யூடியூபர் தொழிலதிபர் தினேஷ் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். தனக்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் இருப்பதாகவும் அதன் மூலம் தினேஷின் நிறுவனத்திற்கு விளம்பரம் தேடி தருவதாகவும் நம்ரா காதிர் தினேஷிடம் கூறி நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவரும் ஒன்றாக பல இரவுகள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நம்ரா காதிர் மற்றும் தொழிலதிபர் தினேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது நம்ரா காதிர் கணவர் மணிஷ் என்பவரும் அதே அறைக்கு வந்ததாக தெரிகிறது. அப்போதுதான் நம்ரா காதிர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தினேஷ்க்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் ஓட்டல் அறையில் நம்ரா காதிர் தினேஷின் ஏடிஎம் கார்டை கேட்டதாகவும் அதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தினேஷ் காவல் துறையில் புகார் அளித்தார். தன்னிடம் 80 லட்ச ரூபாய்க்கு மேல் நம்ரா காதிர் மோசடி செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது நம்ரா காதிர் மற்றும் அவரது கணவர் முன்ஜாமீன் பெற்றனர். இதனை அடுத்து இருவரையும் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நம்ரா காதிர் மற்றும் அவரது கணவரின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில் நம்ரா காதிரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இளம் தொழிலதிபர் தினேஷை காதல் என்ற வலையில் வீழ்த்தி ரூபாய் 80 லட்சம் வரை மோசடி செய்த பெண் யூடியூபர் நம்ரா காதிர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து லீக்.. அதிர்ச்சியில் 'துணிவு' படக்குழுவினர்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

'என்னால் இதுக்கு மேல் முடியாது.. 'தங்கலான்' நடிகை மாளவிகா மோகனனின் வீடியோ!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'தங்கலான்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டு

என்ன வெங்காயத்த நம்ம பண்றது.. விக்ரமனிடம் ஆவேசமான போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 58 நாள் முடிவடைந்த நிலையில் இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். 

திரையுலகில் நுழையும் ஷாருக்கான் மகன்.. முதல் படத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் திரையுலகில் நுழைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.