யுவன்ஷங்கர் ராஜா-கார்த்திக் ராஜா இணைந்த தமிழ்ப்படம்

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுகளாக அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இருந்தபோதிலும் யுவன்ஷங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் உள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இசை நிறுவனம் ஒன்றையும் தொடங்கி ஒருசில படங்களின் இசை உரிமையை பெற்று வருகிறார். பாரதிராஜா நடித்து வரும் 'குரங்கு பொம்மை' படத்தின் இசையுரிமையை நேற்று யுவனின் இசை நிறுவனம் பெற்றது என்ற செய்தி வெளிவந்த நிலையில் இன்று, பாரதிராஜா நடித்து வரும் இன்னொரு படமான 'படைவீரன் என்ற படத்தின் இசையுரிமையையும் பெற்றுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 'படைவீரன்' படத்திற்கு யுவனின் சகோதரர் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் இசைஞானியின் இரு வாரீசுகள் இணைந்த படம் என்ற பெருமையை 'படைவீரன்' பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ், பாரதிராஜா, அகில், அமிர்தா, மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தானா என்பவர் இயக்கியுள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

More News

டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்...

நான் கமல் கோபத்தை 100% பார்த்தவன். சந்திரஹாசன் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்த நிலையில் இன்று சென்னை காமராஜர் அரங்கில் சாருஹாசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட&

அதிரடி ஆக்சன் காட்சிகளில் பிரபல நடிகை

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, விஜய் நடித்த 'புலி' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தின் போலீஸ் கேரகரில் நடித்து வருகிறார்...

நான் ஏன் 'விஐபி 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கஜோல் கூறிய முக்கிய காரணம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்...

அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள்...