நிதின்சத்யா நாயகனாக கலக்கும் "கொடுவா': டைட்டில் டீசரை வெளியிட்ட யுவன்சங்கர் ராஜா!

  • IndiaGlitz, [Friday,December 30 2022]

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமாநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் கொடுவா. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.

சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் கொடுவா. இராம்நாடு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமாநாதபுரம் மாவட்டத்தை சுற்றி உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமாநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நேற்று யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டைட்டில் டீசர் மற்றும் இன்று ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

சுரேஷ் சதையா இயக்கத்தில் தரண்குமார் இசையில் கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

நயன்தாரா எனக்கு போட்டியா? மனம் திறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா என்பதும் இருவரும் தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சென்ற கார் விபத்து.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

பிரேசில் நாட்டிற்காக உலக கோப்பையை மூன்று முறை பெற்று தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

100வது வயதில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்

 பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு

'கேஜிஎப் 3' படத்தில் கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா சகோதரர்கள்? வைரல் புகைப்படம்

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் 'கேஜிஎப் 3'  படம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.