எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே! 'மாநாடு' வெற்றிக்கு நன்றி தெரிவித்த யுவன்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு, எஸ்ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று யுவன் சங்கர் ராஜாவின் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘மாநாடு’ வெற்றி குறித்து நன்றி தெரிவித்து யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே!

இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

’மாநாடு’ திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் BGM இல் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. ’மாநாடு’ திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.

இவ்வாறு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்

More News

வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல்… புதிய சாதனை படைத்த  மரைக்காயர் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடிப்பில் நாளை (டிசம்பர் 2) வெளியாகவுள்ள திரைப்படம் “மரைக்காயர்- அரபிக் கடலின்டே சிம்ஹம்“

'நான் பார்த்த முதல் முகம்': 'வலிமை' அம்மா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'வலிமை' படத்தின் அம்மா சென்டிமென்ட்

மாநாடு வெற்றியை மனதார பாராட்டிய பிரபல நடிகர்!

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் மோகன்லால் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் “மாநாடு“ திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

கடற்கரையில் ஹாட் செல்பி… வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்!

தமிழ் சினிமாவில் “கேடி“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்

ரகளை செய்தபடி மொட்டை மாடியில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ் நடிகை!

தமிழில் சினிமாவில் “ஒருநாள் கூத்து“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்தப் படத்தில் இடம்பெற்ற