'மாநாடு' சிங்கிள் எப்போது? யுவன்ஷங்கர் ராஜா தகவல்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் பாஸ்ட் சிங்கிள் பாடல் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மறைவை அடுத்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமத்தில் இருக்கும் நேரத்தில் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியீட்டு கொண்டாடுவது மனித நேயமற்ற செயல் ஆக இருக்கும் என்றும் லாக்டவுன் முடிந்தவுடன் இயல்பு நிலை திரும்பி உடன் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கலைஞர் ஒரு சகாப்தம்...! கட்டுரையில் அடக்க முடியாத தமிழ்க்கடல் கருணாநிதி....!

தமிழகத்திற்கு புதிய செயல்தலைவனை தந்த முதல்வன் தான் கருணாநிதி.

கமல்ஹாசன் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

உலக நாயகன் கமல்ஹாசன் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர செய்துள்ளது 

உதயநிதியை சந்தித்து 2 டன் உணவு கொடுத்த பிரபல நடிகை!

நடிகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதியை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் இரண்டு டன் உணவுப் பொருள்களை வழங்கி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

இசைஞானிக்கு இசையால் வாழ்த்து கூறிய 'சூரரை போற்று' நாயகி!

இசைஞானி இளையராஜா நேற்று தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்

இளசுகளுடன் ஆடையில்லாமல் பேச ஆயிரம் ரூபாய்....! ஏமாந்து போன போன காளைகள்....!

பெண்களுடன் ஆபாசமாக பேசுவதற்கு 500,1000 ரூபாய் என வசூலித்து, ஏமாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் புலம்பி வருகிறார்கள்.