கம்பேக் கொடுக்கிறாரா யுவராஜ் சிங்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராகவும் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாகவும் இருந்து அதிரடி காட்டியவர் யுவராஜ் சிங். இவர் தன்னுடைய தனித்திறமையால் பலமுறை இந்திய அணியை வெற்றிப்பெற செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது 39 வயதான யுவராஜ் சிங் ரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவாரா? என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு விளையாடத் துவங்கிய யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் தொடர் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் 14 சதத்தை விளாசிய இவர் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 11 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அதேநேரத்தில் 148 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளின்போது இந்திய அணியின் ஹீரோவாக இருந்து செயல்பட்டார். அதேநேரத்தில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பெற்று மீண்டுவந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் பழைய ஃபார்ம் இல்லாத காரணத்தால் அதிகளவு வாய்ப்பு மறுக்கப்பட்ட யுவராஜ், லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் விளையாடி இருந்தார். இதையடுத்து கடந்த 2019 ஜுன் மாதம் அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் விலகிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு கம்பேக் கொடுக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இயைதடுத்து ரசிகர்கள் பலரும் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

'அன்புசெல்வன்' படம் குறித்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் 'அன்புசெல்வன்' என்ற திரைப்படம் உருவாகுதாக இன்று காலை திரை உலக பிரபலங்கள் டுவிட்டர் பக்கங்களில் விளம்பரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறை சொன்ன அண்ணாச்சிக்கு அக்சரா கொடுத்த பதிலடி!

நேற்று பிக்பாஸ் வீட்டில் 'சினிமா சினிமா' என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லிய இமான் அண்ணாச்சிக்கு அக்ஷரா கொடுத்த பதிலடி இன்றைய அடுத்த புரமோவில் வந்துள்ளது 

விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

என்னை தக்கவைக்க வேண்டாம்- தோனியின் பேச்சால் ஆடிப்போன ரசிகர்கள்!

அடுத்த ஐபிஎல் தொடருக்காக என்னை அதிகவிலை கொடுத்து தக்கவைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேப்டன்

திருப்பதி கோவிலில் நடிகை ரோஜாவுடன் விஷால்: வைரல் புகைப்படம்!

விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இன்று விஷால் திருப்பதி ஏழுமலையான் கோவில்