close
Choose your channels

சென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்!

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் சென்னையில் தான் உள்ளனர். இதனையடுத்து சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் நேற்று வரை ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒரு மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தண்டனையார்பேட்டை மண்டலம். இம்மண்டலத்தில் 1044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை ராயபுரம் மண்டலத்தில் 1981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் 1460 பேர்களும், திருவிக நகரில் 1188 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1118 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மண்டலங்களில் மட்டும் மொத்தம் 6791 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அண்ணா நகரில் 867 பேர்களும், வளசரவாக்கத்தில் 703 பேர்களும், அடையாறில் 579 பேர்களும், அம்பத்தூரில் 446 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.