2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் 2019ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட்டார். இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோவைச் சேர்ந்த சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவைச் சேர்ந்த வர்த்திகா சிங் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற மூன்று பேரிடமுமே ஒரே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோசிபினியின் சொன்ன பதிலே அவர்க்கு வெற்றி பெற உதவியது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயம் எது..?என்பது தான் அந்த கேள்வி. அதற்கு பதிலளித்த சோசிபினி தலமைப் பண்பு தான் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு. மேலும் அவர், பெண்கள் சமுதாயத்தில் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டு தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த பதிலுக்காக எல்லோருடைய பாராட்டையும் பெற்றார்.

 

More News

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...

சுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி! தொடரும் பெற்றோர்களின் அலட்சியம்

பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் உள்பட ஒருசில குழந்தைகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்

23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர்

ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் 'டெடி'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.