close
Choose your channels

சசிகலா குடும்பம் வெளியேறிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன் - தம்பிகள். கே.பி முனுசாமி

Wednesday, April 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக தலைவர்கள் அனைவருமே சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரனின் கட்டுப்பாட்டுக்கு கட்சி மாறியது. இப்படி சசிகலாவின் குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்த அதிமுகவினர் இப்போதுதான் தைரியமாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றிவிட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களில் ஒருவராகிய கேபி முனுசாமி, 'சசிகலா குடும்பத்தை வெளியேற்றி விட்டால் இரு அணியினரும் அண்ணன் -தம்பிகள் என்று கூறியுள்ளார்.
இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி மேலும் கூறியபோது, 'அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர் அகற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அண்ணன் தம்பிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு மீண்டும் சுமூகமாகும்போது சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளப்படும். எங்கள் கோரிக்கையை ஏற்று சசிகலா பேனர்களை அகற்றியது பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கை. தொடர்ந்து எங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது.
சசிகலா குடும்பத்தை அகற்றினால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள். கருத்துவேறுபாடுகளை முதலில் அகற்றி விட வேண்டும். சுமூகமான சூழல் அமையும் போது பேச்சுவார்த்தை நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் உள்ளவர்கள் எதிரணியிலும் உள்ளனர். சின்னத்தைப்பெற தேர்தல் கமிஷனுக்கே பணம் கொடுத்து கட்சியை வளைக்கப்ப்பார்த்திருக்கிறார் டிடிவி.தினகரன். அவரைக் கைது செய்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது` என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.