close
Choose your channels

எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருசில எம்.எல்.ஏக்கள் ஊடகங்கள் முன் தோன்றி தாங்கள் விருப்பப்படி இருப்பதாக கூறினாலும் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், உடனே ரிசார்ட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூவத்தூரில் உள்ள ஒருசிலர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாளர்களாக மாறும் மனப்பான்மையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாளிக்கும் வகையில் சசிகலாவே நேரடியாக தற்போது கூவத்தூர் சென்று கொண்டிருக்கின்றார். இன்னும் சில நிமிடங்களில் அவர் கூவத்தூரை அடைவார் என்று கூறப்படுகிறது.

சசிகலா மிகவும் நம்பிக்கை வைத்திருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களே அணி மாறியதால் அவரை அடுத்து மேலும் சிலர் அணி மாறவுள்ளதாக வந்த தகவலை அடுத்தே அவர் கூவத்தூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.