close
Choose your channels

ஜெயேந்திரருடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு தூது?

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கும் இடையே சிலகாலம் நல்லுறவு இருந்தாலும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஜெயேந்திரர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை சந்தித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது முதல்வராக உள்ள நிலையில் இன்று திடீரென அதிமுக துணைப்பொதுச்செயாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் சென்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள காஞ்சி காமாட்சி கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ஜெயேந்திரர் சார்பில் சசிகலாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும், இந்த அழைப்புக்கு நன்றி தெரிவிக்கவே டிடிவி தினகரன் அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் பெங்களூர் சிறையில் உள்ள நிலையில் பாஜக மேலிடத்தில் ஒருசில கோரிக்கைகள் வைக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.