close
Choose your channels

திகார் சிறையில் தினகரனை சந்தித்த அதிமுக பிரமுகர்கள்

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் காரணமாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இன்று திகார் சிறையில் உள்ள டி.டி.வி. தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் 2 எம்.பி.க்கள் சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் குறித்து தினகரனிடம் அதிமுக பிரமுகர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்) மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் விஜிலா சத்தியானந்த், மரகதம் ஆகிய 5 பேரும் சந்தித்து பேசியுள்ளனர்.

கட்சி நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்கி கொள்வதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தாலும் இன்னும் அவர் பிடியில்தான் கட்சி இருக்கின்றது என்பதை இந்த சந்திப்பு நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.