close
Choose your channels

போராட்டம் செய்யும் விவசாயிகளின் பசியோ போக்கிய குருத்வாரா

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைநகர் டெல்லியில் 2வது கட்டமாக தமிழக விவசாயிகள் கடந்த 17நாட்களாக போராடி வருகின்றனர். வழக்கம் போல் மத்திய, மாநில அரசுகள் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒருசில அரசியல்வாதிகள் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தருவதாக கூறி புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்கின்றனர்.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத குருத்வாரா அமைப்பினர் போராடும் விவசாயிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். குருத்வாரா அமைப்பினர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும், போராடும் விவசாயிகளின் உணவுத்தேவையை அறிந்து சுவையான, சூடான உணவை வழங்கி வருகின்றனர்.
முதல்கட்ட போராட்டத்தின்போது தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல ஓட்டல் ஒன்றின் டெல்லி கிளை உணவு வழங்கியது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி காரணமாக அவர்களால் உணவு வழங்க முடியவில்லை. இந்த நேரத்தில் குருத்வாரா அமைப்பினர் உணவு வழங்காவிட்டால் போராட்டம் செய்யும் விவசாயிகள் உணவுக்கு திண்டாடி இருப்பார்கள். இதனால் குருத்வாரா அமைப்பினர் விவசாயிகளுக்கு கடவுள் போல் தெரிகின்றனர்.
இந்த நிலையில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு உணவு வழங்குவதை நிறுத்தும்படி பல அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டல் வருவதாகவும், இந்த மிரட்டலுக்கெல்லாம் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும், மிரட்டல் வர வர எங்களுடைய உதவி அதிகமாகும் என்றும் குருத்வாரா அமைப்பினர் கூறி வருகின்றனர். உலகத்திற்கே சோறு போட்ட அந்த விவசாயிகளுக்கு கருணை உள்ளதுடன் உணவு வழங்கும் அந்த அமைப்புக்கு அனைவரும் நன்றி தெரிவித்து கொள்வோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.