close
Choose your channels

அப்பல்லோவில் ஜெ-சசி பேசிய வீடியோவை வெளியிடுவேன். திவாகரன் மகன் மிரட்டல்

Friday, April 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கட்சியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மூத்த அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர். இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் உரையாடிய வீடியோ ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் அந்த வீடியோ வெளிவந்தால் பலருடைய சுயரூபம் தெரியவரும் என்றும், அதை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை…காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள், அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்

இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்…சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்

ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்

உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்…?

P.H.பாண்டியன்,மனோஜ்பாண்டியன்,ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்…?
அந்த நாள் மிக விரைவில்….

இவ்வாறு ஜெயானந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா இல்லை, அவருடைய புகைப்படமோ, வீடியோவோ இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை கைவிரித்த நிலையில் இவருக்கு மட்டும் எப்படி அந்த வீடியோ கிடைத்தது எப்படி? என்பது புரியாத மர்மமாக உள்ளது. சசிகலா குடும்பத்தினர்களுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க வெடிக்க பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.