close
Choose your channels

தேர்தல் ஆணையம் அதிரடியால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் தற்போது அதிமுகவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலாளரை நியமிக்க முடியும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சற்றுமுன் ஓபிஎஸ் அவர்கள் அளித்த பேட்டியில் சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிரந்தர பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.