close
Choose your channels

மீன்கள்.காம்: ஆன்லைன் மூலம் அரை மணி நேரத்தில் மீன்கள் வாங்கலாம்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குண்டூசி முதல் செல்போன், நகைகள் வகை அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதேபோல் பீட்சா, பர்கர் உள்பட கிட்டத்தட்ட அனைத்து உணவுப்பொருட்களையும் பெரும்பாலான உணவகங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதியமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கலெக்டர் அன்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், '"மீன் உணவு வகைகள் உண்பதால் இதயநோய் வராமல் தடுக்கிறது. ஆரோக்கியமான உணவான மீன் உணவுப்பொருள்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்யலாம். இதற்காகவே ஒரு தனி மென்மொருளும் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னை மக்களுக்காக இந்த ஆன்லைன் சேவை ஆரம்பிக்கப்படுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம். இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.