close
Choose your channels

வைரமுத்து மீதான கோபத்தில் இளையராஜா செய்தது இதுதான்: சீனுராமசாமி

Saturday, May 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து குறித்த சர்ச்சையை கடந்த சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கிறது என்பதும் இசை பெரிதா? மொழி பெரியதா? என்று வைரமுத்து பேசியதற்கு கங்கை அமரன் செய்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்..

இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:

உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்

முன்னதாக வைரமுத்து, இளையராஜா விவகாரம் குறித்து மறைமுகமாக தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்

புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்

வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்

மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்

அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.