close
Choose your channels

ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். கவுதம் காம்பீர் ஆவேசம்

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது சில ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி அவமதித்த வீடியோ ஒன்று நாடு முழுவதும் பரவி பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்து குறித்து நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இதே சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்கள் சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் தங்கள் சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவுதம் காம்பீர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '`நம் வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரைப் பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே` என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

அதேபோல் சேவாக் தனது சமூகவலைத்தளத்தில் கூறியபோது, 'இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.