close
Choose your channels

சென்னையில் பிரபல கார் ரேஸ் வீரர் மனைவியுடன் மரணம்

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் சென்னை மெரீனா அருகே நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அவருடன் காரில் சென்றிருந்த அவருடைய மனைவியும் இந்த விபத்தில் மரணம் அடைந்தார்
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் தங்களுடை பி.எம்.டபிள்யூ காரில் பட்டினப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனர். கார் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென கார் அஸ்வின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்ததாகவும், காரில் இருந்த இருவரும் வெளியே வரமுடியாமல் காருக்குள்ளேயே மரணம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த விபத்து நடந்தபோது வழக்கம்போல் அந்த பகுதியில் இருந்தவர்கள் காரின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற முயலாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டிருந்தனர் என்பதும் வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.