close
Choose your channels

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

சசிகலாவின் அரசியல் வாழ்வை முடிவு செய்யும் இந்த தீர்ப்பு குறித்து அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், அரசியல் விமர்சகர்கள், திரையுலகினர் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்' என்று பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.