close
Choose your channels

'உத்தம வில்லன்' நஷ்டம் விவகாரம்.. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ திரைப்படம் நஷ்டத்தை அளித்த நிலையில் அதற்கு பதிலாக ஒரு படம் நடித்து தருவேன் என்று கமல்ஹாசன் உறுதிமொழி அளித்ததாகவும் ஆனால் அந்த உறுதி மொழியை 9 ஆண்டுகளாக நிறைவேற்றி தரவில்லை என்பதை அடுத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் என்று வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த புகாரில் கமல்ஹாசன் எங்கள் நிறுவனத்திற்கு ‘உத்தம வில்லன்’ நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் அவர் படம் நடித்து தரவில்லை என்றும் எனவே தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’உத்தம வில்லன்’ நஷ்டம் குறித்து லிங்குசாமியின் புகார் தொடர்பாக கமல்ஹாசனிடம் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது . ’உத்தம வில்லன்’ விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக ஒரு குழு அமைத்த பிறகு விரைவில் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.